ரவுடி லிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து கைதானவர் மீது மேலும் ஒரு வழக்கு
- நீதிமன்றம் செல்வனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் 294 (ஏ) ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி புதுகுடியிருப்பு காமரா ஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்ற செல்வன் (வயது 54).
இவர் வடசேரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி யில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்றம் செல்வனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்வன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்த னர்.
இந்த நிலையில் செல்வத்தின் மீது வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 294 (ஏ) ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
வாரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வன் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கிலும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.