உள்ளூர் செய்திகள்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 8-ந்தேதி நடக்கிறது

Published On 2022-11-02 12:33 IST   |   Update On 2022-11-02 12:33:00 IST
  • கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.
  • மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான வருகிற 8-ந்தேதி இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னா பிஷேக நடக்கிறது. இதை யொட்டி அன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 9.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் நடக்கிறது.

பின்னர் காலை 10.15 மணிக்கு மூலவரான குகநா தீஸ்வர ருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப் பட்ட அன்னத்தால் அன்னா பிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News