உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம் 

நாகர்கோவில் பேரூராட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-10-26 08:24 GMT   |   Update On 2022-10-26 08:24 GMT
  • பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
  • பதவி உயர்வு வழங்கவேண்டும்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மண்டலத்தில் , பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் பொது சுகாதார துறையில் மேற்கொள்வது போல், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .

நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996 - க்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு , பதவி உயர்வு வழங்கவேண்டும் . அரசு பணியாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பெறுவதில் , மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடினமான சூழ்நிலையை கண்டித்தும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது . போராட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

மாநில பொதுச்செயலாளர் முத்து , மாநில பொருளாளர் சேகர் , மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ், துணைப்பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட செயலாளர் தனசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ் , இசக்கிமுத்து , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News