உள்ளூர் செய்திகள்

பறக்கை அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-10-27 10:22 GMT   |   Update On 2023-10-27 10:22 GMT
  • . இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது
  • அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால்

நாகர்கோவில் : பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாமுவேல் (வயது 50), லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால் மனைவி சொரூபராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த ஜெஸ்டின் சாமுவேல் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் அருகே விஷ மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சொரூபராணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News