உள்ளூர் செய்திகள்

கவிதாலயா நாட்டிய பள்ளியின் சலங்கை அணி விழா

Published On 2023-07-29 13:12 IST   |   Update On 2023-07-29 13:12:00 IST
  • இடலாக்குடியில் அமைந்துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெறுகிறது.
  • நாட்டிய கலை மணிகள் கவிதா மற்றும் நிஷா குழுவினர் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் சைமன்ந கரை தலைமையிடமாக கொண்டு, அஞ்சுகிராமத்தில் கிளை நிறுவனம் அமைத்து செயல்பட்டு வருகிறது கவிதாலயா நாட்டியபள்ளி. இந்த நாட்டியபள்ளி குமரி மாவட்டத்தின் சிறந்த நாட்டிய பள்ளிக்கான விருதினை பெற்றுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியின் சலங்கை அணி விழா நாளை (30-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடியில் அமைந்துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் 13 மாணவிகள் சலங்கை அணி செய்ய உள்ளனர். நிகழ்ச்சி யில் விஜய் வசந்த் எம்.பி., புதுச்சேரி சங்கீதா சலங்கை நாட்டியாலயா இயக்குனர் கலைமாமணி ராஜமா ணிக்கம், புதுச்சேரி கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் இசை இயக்குனர் மற்றும் நாட்டிய ஆராய்ச்சி மேற்பா ர்வையாளர் கலைமாமணி மரிய ஸ்டெல்லா, சென்னை உயர்நீதி மன்ற வக்கீல் சிவகுமார் சிவாஜி, பாரத கலைமாமணி சூசடிமா சூசன் (கத்தார்), அழகிய பாண்டிபுரம் அனுகிரஹா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சதீஷ்குமார், மெற்றில்டா சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொள்கி ன்றனர்.

திருச்சி கலை காவேரி கலைக்கல்லூரி இயக்குனர் மற்றும் செயலாளர் அருட்தந்தை லூயிஸ் பிரிட்டோ கலந்துகொண்டு சலங்கை பூஜை செய்யும் குழ ந்தை களை ஆசீர்வதிக்கின்றார்.

கவிதாலயா நாட்டிய பள்ளியில் பரதம், வாய்பாட்டு, மேற்கத்திய நடனங்கள் முறையே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி (யுகே), அமெரிக்கா முத்தமிழ் யூனிவர்சிட்டி (யுஎஸ்ஏ) ஆகிய பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

பட்டயபடிப்பு முடிக்கும் தருவாயில் இருக்கின்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் அளித்து அத ற்கான தகுந்த நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு பரதநாட்டியத்தில் முறையே பயிற்சி அளித்து சலங்கை பூஜை அதனை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வைக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நாட்டிய கலை மணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப்பில் கவிதாலயா விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News