உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கைராட்டை சிறப்பு கண்காட்சி

Published On 2023-09-24 07:49 GMT   |   Update On 2023-09-24 07:49 GMT
  • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
  • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. அந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தற்போது முழுமையான கைராட்டை கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் குடிசைத்தொழிலாக வருமானம் ஈட்டவும், வீட்டில் தங்களது துணி களை நெய்து கொள்ளவும் ஒரு கருவியாகத் திகழ்ந்தது இந்த கைராட்டை ஆகும்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று மாவட்ட அரசு அருங்காட்சி யக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்தார். இந்தக்கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News