உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே குடிப்பழக்கம் காரணமாக காதலி பேச மறுத்ததால் கத்தியால் குத்தினேன்

Published On 2023-09-09 06:46 GMT   |   Update On 2023-09-09 06:46 GMT
  • தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
  • இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

இரணியல் :

இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானபிரகாசம். இவரது மகன் பிரவீன் ரெஞ்சித் (வயது 27). இவர் மார்பிள் வேலை செய்து வருகிறார். பிரவீன் ரெஞ்சித்தும், இரணியல் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பி.இ.பட்டதாரி இளம்பெண் ஒருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரவீன் ரெஞ்சித் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் இளம்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் பிரவீன் ரெஞ்சித் அடிக்கடி இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை இளம்பெண் வேலை முடிந்து குருந்தன்கோட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குருந்தன்கோடுகுளம் அருகே சென்றபோது பின்னால் வந்த பிரவீன் ரஞ்சித் அவரை கையால் தாக்கி அவதூறாக பேசியுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீன் ரெஞ்சித்தை கைது செய்தனர். குடிப்பழக்கம் காரணமாக காதலி பேசாத ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக இரணியல் போலீசாரிடம் பிரவீன் ரெஞ்சித் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News