உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் அதிபர் பலி

Published On 2023-06-25 06:41 GMT   |   Update On 2023-06-25 06:41 GMT
  • ரோட்டோரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதியது
  • சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பிரம்மேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரம்மேஸ்வரன் (வயது 59), ஓட்டல் அதிபர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் இவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சென்று ரோட்டோரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த பிரம்மேஸ்வரனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பிரம்மேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News