உள்ளூர் செய்திகள்

வடசேரியில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-03 13:39 IST   |   Update On 2023-09-03 13:39:00 IST
  • மனவேதனை அடைந்த ஆனந்த், தான் தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி திரட்டுதெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மது குடிப்பதற்கு தனது தாயார் லீலா என்பவரிடம் பணம் கேட்டார். ஆனால் லீலா பணம் கொடுக்கவில்லை. மது குடிக்க கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்த், தான் தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்த நிலையில் லீலா வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆனந்த் வீட்டில் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லீலா உடனே வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News