கருங்கல் அருகே பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார்.
- 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்
மார்த்தாண்டம் :
கருங்கல் அருகே அமைந்துள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பொறி யாளர் ஐசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்மி பிறேமா அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்து நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அதில் மாண வர்கள் வேலைவாய்ப்பு களை உருவாக்கி வேலை கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள பல காரியங்களை கண்டுபிடிக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்ற வேண்டும். இது போன்ற பல அரிய கருத்துக்களை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எடுத்து கூறினார்.
தொடர்ந்து 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற முதுகலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி அஸ்வினி, 5-வது இடம்பெற்ற முதுநிலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி திவ்யா, பல்கலை அளவில் 13-வது இடம் பெற்ற இளங்கலை சிவில் பொறி யியல் மாணவி அஜிரா ஆகியோர் பாராட்டப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.