உள்ளூர் செய்திகள்

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம் 11-வது நாளாக நீடிப்பு

Published On 2023-08-19 06:47 GMT   |   Update On 2023-08-19 06:47 GMT
  • போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை.
  • பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரிஅருகே உள்ள சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல்பங்கு அமைக்கு ம்பணிதொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத் தொடர்ந்து இன்று 11- வது நாளாக பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருக்களில் இன்றும் 3-வது நாளாக கருப்புக் கொடி கட்டப்பட்டு உள்ளது.இதனால்அங்கு பெரும்பரபரப்பும் பதட்ட மும்நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு இன்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுஉள்ளனர்.

போராட்டத்தில ஈடு பட்டுள்ள மீனவர்க ளுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News