உள்ளூர் செய்திகள்

வடசேரியில் 4-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-09-05 08:09 GMT   |   Update On 2022-09-05 08:09 GMT
  • சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை அகற்றினார்கள்.
  • ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வடசேரி பகுதியில் இன்று 4-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வடசேரி முதல் வெட்டூர்ணி மடம் வரை உள்ள சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News