உள்ளூர் செய்திகள்
மேலசங்கரன்குழியில் மூதாட்டி தற்கொலை
- ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜாக்கமங்கலம் :
மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி முத்தம் மாள் (வயது 76). சிவலிங்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் முத்தம்மாள் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கணவரின் கல்லறைக்கு சென்ற அவர், அப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் கலைக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.