உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே ஆறு, குளங்களில் ஆக்கிரமிப்பு; வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2022-09-27 07:07 GMT   |   Update On 2022-09-27 07:07 GMT
  • பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
  • ஏராளமான போலீசார் குவிப்பு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே பகவதி அம்மாள்புரம் உள்ளது. இந்த பகுதியில் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறையினர் இந்த பகுதியில் உள்ள ஆறு, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் இந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 7 வீடுகள் ராட்சத ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News