தாமரைகுளம் பதியில் விருந்துண்ட நாள் திருவிழா
- தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாள்
- மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.
கன்னியாகுமரி :
ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை வழங்கிய மூலப்பதியான தாமரைகுளம் பதியின் முதல் குருவான குரு.பொன்னணைஞ்சவன் உடையகுட்டி நாடார் அய்யாவுக்கும், அவர் தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை விருந்துண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 7 மணிக்கு பால் மற்றும் இனிப்பு தர்மம் வழங்குதலும், 11 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும்,
11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், இரவு 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தாமரைகுளம் பதி தக்கார், பதி பரம்பரை குருமார்கள் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்திருந்தனர்.