உள்ளூர் செய்திகள்
கன்கார்டியா பள்ளியில் கிரிக்கெட் போட்டி
- ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது.
மார்த்தாண்டம் :
புனித சவேரியார் ஆலயம் மற்றும் இளைய தீபம் இளையோர் இயக்கம் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டியானது பூட்டேற்றி கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பூட்டேற்றி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சிஜின் போட்டியினை தலைமையேற்று நடத்தினார்.பூட்டேற்றி மேல்நிலைப்பள்ளி தாளாளர் டென்னிஸ், கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலர் அனிதா ராஜகிளன், கிள்ளியூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகிளன் மற்றும் இளையதீபம் இளையோர் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.