உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் வாலிபரை விபசாரத்திற்கு அழைத்ததாக புகார்
- 2 பெண்கள் மீது போலீசார் வழக்கு
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ரூபேஷ் (வயது 24), கோட்டார் நாராயணகுரு மண்டபம் அருகில் நின்றபோது, 2 பெண்கள் அங்கு வந்து விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டார் போலீசில் ரூபேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.