உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-07-08 10:33 GMT   |   Update On 2022-07-08 10:33 GMT
  • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
  • சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 68). இவர் டிரைவர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் வாடகை கார் ஓட்டி வந்தார்.

இவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகன் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மகன் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த முருகன் சம்பவத்தன்று நள்ளிரவு தனது வீட்டில் ஒரு அறையில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றுஅவர்பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News