உள்ளூர் செய்திகள்

மழையின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு 1 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து

Published On 2023-11-08 07:23 GMT   |   Update On 2023-11-08 07:23 GMT
  • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  • மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் இன்று காலையில்"திடீர்" என்று மழைபெய்தது. இன்னொரு புறம் கடல் சீற்ற மாகவும் கொந்தளிப்பா கவும் காணப்பட்டது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்துதொடங்கப் படவில்லை.இதனால் படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலை 9 மணிக்கு மழை நின்றதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.அதன் பிறகுசுற்றுலா பயணிகள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

Tags:    

Similar News