காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள்
- விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
- பா.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப் பதாவது:-
நாட்டு மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரு கின்றனர். மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகள் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் 3 வேளை உணவுக்கு அல்லல்பட்டு வருகின்றனர். நிம்மதியாக வாழ நினைக்கும் மக்களிடையில் பிரிவி னையை உருவாக்கி சமூ கத்தை குருதிகளமாக மாற்றிவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. சமீபத்தில் மணிப்பூர் கலவரம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள் அதற்கு அத்தாட்சி. மக்கள் அன்றாடம் பா.ஜ.க. அரசிடம் கேட்கும் கேள்விகள் ஏராளம். ஆனால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ஓடி ஒளிகிறது பா.ஜ.க அரசு. மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்றி வரும் மோடி அரசு புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்களை பெயர் மாற்றம் செய்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. கல்வி பயின்று பட்டம் பெறும் இளை ஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் சரித்தி ரத்தை மாற்ற வேண்டும், சரித்திர நாயகர்களை மக்களிடம் கொண்டு செல்ல கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. அவற்றை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டி யது காங்கிரஸ் கட்சியின் கடமை. பா.ஜனதா கட்சியின் பொய் முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆகஸ்ட் 20-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட காங் கிரஸ் கமிட்டிகள் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளோம். மாவட்ட தலைவர்கள் ஒருங்கி ணைக்கும் இந்த கூட்டங்கள் அனைத்து நகராட்சிகள், நகர்புற, கிராம ஊராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சி யின் அனைத்து மண்டலங்க ளிலும் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தலைவர் ராகுல்காந்தி பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆகிட சோனி யாகாந்தி வழிகாட்டு தலின்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படு வோம். 'இந்தியா' வை வெற்றிபெற செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.