உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவி
- விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.
- கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
தீபாவளி பண்டிகையை யொட்டி நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புத்தேரி பராசக்தி கார்டனில் நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை மாநில நிர்வாகி கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்திரன், மாவட்ட துணை செயலாளர் பார்வதி, கவுன்சிலர் அக்சயா கண்ணன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெவின் விசு, இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மற்றும் கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.