உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியவர்கள் மீது ரெயில் மோதியது

Published On 2023-10-19 08:29 GMT   |   Update On 2023-10-19 08:29 GMT
  • 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி
  • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.

குழித்துறை :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இளம்பிலாம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (வயது 24). இவரது நண்பர்கள் தினேஷ் (23), அபினேஷ் (23).

இவர்கள் 3 பேரும் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஞானன் விளை பகுதியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் ரெயில் அருகில் வந்து விட்டது. இதனால் தினேஷ், மற்றும் ரதீஸ் மீது ரெயில் உரசியபடி சென்றுள்ளது. இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று காயம்அடைந்த தினேஷ் மற்றும் ரதீசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News