உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு அருகே வெல்டிங் பொருட்கள் திருடியவர் கைது

Published On 2023-09-27 12:11 IST   |   Update On 2023-09-27 12:11:00 IST
  • கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
  • சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

கொல்லங்கோடு :

கொல்லங்கோடு அருகே உள்ள கடம்புவிளை சாத்தங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை காமராஜனை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (37) தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த முன்விரோதத்தில் ஜெபராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நின்ற காரில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புடைய வெல்டிங் உபகரணங்களை விஜயகுமார் திருடி சென்றதாக புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சங்குரொட்டி பகுதியில் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் நாயர், ஏட்டு கணேஷ்குமார் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News