உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-10-29 07:28 GMT   |   Update On 2023-10-29 07:28 GMT
  • வில்சன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டார் : 

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 66). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். வில்சன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வில்சன் நேற்று நீண்ட நேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்தநிலையில் நேற்று இவரது வீடு வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உத்திரத்தில் தூக்கில் வில்சன் தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News