இரணியல் அருகே அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கார் மோதி சாவு
- சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.
- மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இரணியல் :
பூதப்பாண்டி பட்டார்குளம் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் தக்கலை அரசு மருத்துவமனையில் பதிவறை எழுத்தராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 31-ந்தேதி காலை வேலைக்கு செல்வதற்காக பூதப்பாண்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்கான்கடை அருகே உள்ள தோட்டியோடு சந்திப்பில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பனுக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக களியங்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அய்யபபன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி வேணி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி காரை ஒட்டி வந்த ரொனால்டினோ மீது வழக்குப் பதிவு செய்தனர்.