உள்ளூர் செய்திகள்

தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்த சமையல் தொழிலாளி பலி

Published On 2022-09-20 07:57 GMT   |   Update On 2022-09-20 07:57 GMT
  • தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை.
  • உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில்:

சந்தையடி அருகே உள்ள இடையன்விளையை சேர்ந்தவர் தம்பு என்ற முருகன் (வயது 60) சமையல் தொழிலாளி.

இவர் நேற்று மாலை பொற்றையடி அருகே உள்ள வெங்கலராஜன் கோட்டை கால்வாயில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக தண்ணீரில் கிடந்ததால் இவர் பரிதாபமாக இறந்தார். மேலும் கால்வாயில் உள்ள மீன் மற்றும் நண்டுகள் கடித்தும், விழுந்ததில் ஏற்பட்ட காயங்களும் அவர் உடலில் உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் சென்றனர். உடலை கைப் பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News