உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2023-11-13 15:31 IST   |   Update On 2023-11-13 15:31:00 IST
  • ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த முத்து வைரவன் மகன் லட்சுமணன்
  • க்கம்பக்கத்தினர் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த முத்து வைரவன் மகன் லட்சுமணன் (வயது 26), காற்றாலையில் டவர் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் குமாரபுரம் 4 வழி சாலை தேவசகாயம் மவுண்ட் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி நாவல் காட்டைச் சேர்ந்த ராசையா மகன் மகேந்திரன் (27). இவர் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழிக்கு வரும்போது அவ்வையார் அம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துக்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News