உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் 1250 டன் ரேசன் அரிசி வந்தது
- ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
- ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களிலிருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 1250 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.