உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 1250 டன் ரேசன் அரிசி

Published On 2022-07-15 15:45 IST   |   Update On 2022-07-15 15:45:00 IST
  • ரேசன் அரிசி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்
  • ரேசன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு வருகிறது.

தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக 1250 டன் ரேசன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News