உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-02-03 07:43 GMT   |   Update On 2023-02-03 07:43 GMT
  • கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி: 

இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

Tags:    

Similar News