உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கீழ்குளம் அருகே திருமண மண்டபத்தில் பேராசிரியர் - ராணுவ வீரர் மோதல்

Published On 2023-02-12 07:55 GMT   |   Update On 2023-02-12 07:55 GMT
  • புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி பரவை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது65). ஓய்வு பெற்ற பேராசிரியர். தற்போது அங்குள்ள ஒரு கிறிஸ்தவ சபை தலைவராக உள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இது சம்மந்தமாக புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் சம்ப வத்தன்று அங்குள்ள திரு மண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சென்று ள்ளனர். அப்போது ஜெகன் குமார் தகாத வார்த்தை கள் பேசி ஜஸ்டின் கிறிஸ்டோ பரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.

இதில் காயம் அடைந்த ஜஸ்டின் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று ஜெகன்குமார் அளித்துள்ள புகாரில் ஜஸ்டின் தன்னை தகாத வார்த்தைகள் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடு த்துள்ளதாக தெரிவித்து ள்ளார். மேலும் அவர் தேங்கா ப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News