உள்ளூர் செய்திகள்

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகசெயலாளர் ஜெஸீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம் 

அஞ்சுகிராமத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-09 14:27 IST   |   Update On 2022-12-09 14:27:00 IST
  • அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகசெயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
  • பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது

கன்னியாகுமரி:

அஞ்சுகிராமத்தில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்பட பொதுமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சு கிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஜெயலலிதாபேரவை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய கழக பொருளாளர் டாக்டர் பாலமுருகன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சோபி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் வைகுண்ட மணி, அகஸ்தீ ஸ்வரம் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் அருள் செல்வி, கவுன்சிலர் மீனாஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதி முக செயலாளர் ஜெஸீம் முன்னாள் நாகர்கோவில் நகர கழகசெயலாளர் சந்துரு என்றஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரம் பிள்ளை, கவுன்சிலர் ராமச்சந்திரன், விஜயன், ஆட்டோ பரமசிவன், விஷ்ணு, அஞ்சை சுரேஷ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அழகப்பபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பேரூர் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.பேரூர் அவை தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் முன்னாள் நகரக் கழகச் செயலாளர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெரோம், செல்வி, பெமியா, குமார், சுரேஷ், ஆன்றனி, தவராஜா, சுனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பேரூர் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பேரூர் அவைத் தலைவர் சிந்தாமணி, மயிலாடி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags:    

Similar News