உள்ளூர் செய்திகள்

சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதி.

திருவட்டார் அருகே மார்த்தாண்டம் - குலசேகரம் சாலையில் ஏற்பட்ட விரிசல்

Published On 2023-01-14 09:42 GMT   |   Update On 2023-01-14 09:42 GMT
  • வாகன ஓட்டிகள் அவதி
  • இந்த சாலையில் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேரளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை நெடுஞ்சா லையில் ஏராளமான வாக னங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு புதியதாக தார் போடப்பட்டது.

இதில் திருவட்டார் அரசு உயர்நி லைப்பள்ளி எதிரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து ஆய்வு செய்து அவசரகதியில் தற்காலிக மாக அந்த பகுதியை தார் போட்டு சரி செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிர் புறமிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டை யொட்டியுள்ள பகுதியில் இருந்து தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

"காங்கரை தேரி" எனப்ப டும் இந்த பகுதி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அதிலும் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சிலவேளைகளில் நகர முடி யாமல் திணறும். அவ்வாறு திணறும் லாரி உள்ளிட்ட கனரக வாகனத்தில் இருந்து சிறிய வாகனங்களில் பொருட்கள் மாற்றப்பட்ட

பின்னரே கனரக வாக னங்கள் நகர்ந்து செல்லும். இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் வரும்போது ரோட்டில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான லோடு கனிம வளங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்றுவருவதால் ரோடு பாதிப்புக்குள்ளாகிறது

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் தரப்பில் இருந்து வெடித்திருந்த சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டு ரோடு ரோலர் இயந்திரத்தை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது தார்க்கலவை போடப்பட்ட இடத்திலிருந்து, சாலையில் தார்க்கலவை செட் ஆகாமல் மீண்டும் வெடிப்பு ஏற்படத்துவங்கி விரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குளாகின்றனர்.

எனவே நெடுஞ்சா லைதுறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மே ற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பகுதி வழியாக தான் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேர ளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

இப்பகுதி ரோட்டின் இருபுறமும் நடைபாதை ரோட்டில் இருந்து 1 முதல் 2 அடி பள்ளத்தில் உள்ளதால் பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டை சரி செய்வதோடு ரோட்டின் இருபுறமும் வர்ண கற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News