உள்ளூர் செய்திகள்

 பிரபு 

குழித்துறை, இரணியலில் ரெயில் மோதி 2 பேர் சாவு

Published On 2023-01-23 08:33 GMT   |   Update On 2023-01-23 08:33 GMT
  • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • இன்று பிரேத பரிசோதனை

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 41) கொத்தனார். இவர் நேற்று இரவு குழித்துறை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பால்ராஜ் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்குளம் காயக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று இரவு இரணியல் அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வந்த ரெயில் மோதி பிரபு இறந்துள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகர்கோ வில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பிரபு, பால்ராஜ் இருவரது உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படு கிறது.

Tags:    

Similar News