உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 1326 டன் ரேசன் அரிசி
- ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
- கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் இருந்து 21 பெட்டிகளில் 1326 டன் புழுங்கல் அரிசி இன்று நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.