உள்ளூர் செய்திகள்

கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

ஆகாச மாரியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி

Published On 2023-08-15 09:47 GMT   |   Update On 2023-08-15 09:47 GMT
  • தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.
  • பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது.

விழாவில் பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்ச மிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போட்டும், முடி இறக்கையும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்பு, பாரம்பரிய முறைப்படி பனை மட்டையில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது.

இதில் ஏராளமான கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

Tags:    

Similar News