உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

பழையகோட்டையில் ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் விற்பனை

Published On 2022-06-14 04:52 GMT   |   Update On 2022-06-14 04:52 GMT
  • காளைகள், இளங்கன்றுகள் என 66 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
  • கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 66 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் 45 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.

Tags:    

Similar News