உள்ளூர் செய்திகள்
கழுநீர்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
- கீழப்பாவூர் ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
- ஞானதிரவியம் எம்.பி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர்.
ஆலங்குளம்:
கீழப்பாவூர் ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், ஊராட்சி துணைத்தலைவர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கை.முருகன் வரவேற்று பேசினார்.
ஞானதிரவியம் எம்.பி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர். விழாவில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, வி.ஏ.ஓ. வேல்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மூக்கையா நன்றி கூறினார்.