உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

கல்லிடைக்குறிச்சியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2023-09-28 09:03 GMT   |   Update On 2023-09-28 09:03 GMT
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக “100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு” சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது.
  • விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

 கல்லிடைக்குறிச்சி:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள், சேரன்மகாதேவி வட்டாரம் சார்பாக "100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு" சமுதாய வளைகாப்பு விழா கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடத்தப்பட்டது

விழாவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி, இசக்கிபாண்டியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா மற்றும் வசந்த சந்திரா, மேலச்செவல் தலைவர் அன்னபூரணியம்மாள், கோபாலசமுத்திரம் தலைவர் தமயந்தி மற்றும் சுந்தர்ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரியசெல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்து லெட்சுமி, செய்யது அலி பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின்தேனா, காந்திமதி , சீதாலெட்சுமி மற்றும் சரஸ்வதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News