உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவர்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

Published On 2022-06-25 10:05 GMT   |   Update On 2022-06-25 10:05 GMT
  • கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10 மற்றும் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சமீர் என்ற மாணவர் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

இதேபோல் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சாய் பிரசன்னா என்ற மாணவர் 600 க்கு 516 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ. பள்ளிக்கு நேரில் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற சமீர் மற்றும் சாய் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News