உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


மாநில அளவிலான எறிபந்து போட்டியில் கலைவாணி பள்ளி 2-ம் இடம்

Published On 2022-12-30 08:59 GMT   |   Update On 2022-12-30 08:59 GMT
  • மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பாராட்டினர்.

சங்கரன்கோவில்:

மாநில அளவிலான எறிபந்து போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.

Tags:    

Similar News