உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 528 ரேஷன் கடைகளில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம், டோக்கன் விநியோகம்

Published On 2023-07-20 09:08 GMT   |   Update On 2023-07-20 09:08 GMT
  • தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
  • இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை:

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம்

இதனை ஒட்டி இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகளை வருவாய் மற்றும் கூட்டுறவுத்துறை பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று ஊரக பகுதியில் மொத்தம் உள்ள 528 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரேஷன் கடைகளில் வினியோகம்

மாவட்டத்தை பொறுத்த வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட வில்லை. பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பும், ரேஷன் கடைகள் முன்பும் பொது மக்களை வர வழைத்து டோக்கன் விநியோ கிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாளை கே.டி.சி. நகரில் ரேஷன் கடை முன்பு டோக்கன் விநியோகிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

5 லட்சம் விண்ணப்பங்கள்

நெல்லை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பிப்பதற்காக 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்து ள்ளது. இவை அனைத்தும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு முழுமையாக நிரப்பப்பட்டு வருகிற 24-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தகுதியான வர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடை பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நகர்புறத்தில் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News