கடத்தூர் பா.ம.க சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி
- முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது.
- காளிதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினர்.
கடத்தூர்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி கடிதங்களை அனுப்பி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட தலைவர் அல்லிமுத்து, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்டத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர்கள் கலைமணி, செல்வம், கடத்தூர் தலைவர் முருகேசன், செயலாளர் கந்தன், இளைஞர் சங்க துணைத்தலைவர்கள் தமிழரசன், தேவேந்திரன், சதீஷ், காளிதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினர்.