உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-01-27 07:10 GMT   |   Update On 2023-01-27 07:10 GMT
  • ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இசக்கி,வசந்தா ஆகியோர் சலவை தொழில் செய்து வருகின்றனர்.
  • பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி வசந்தா.

திருவிழா

இவர்கள் இருவரும் ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சலவை தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் அவர்களது மகள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். துணிகள் வீசப்பட்டு இருந்தன.

மேலும் வீட்டில் உள்ள 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து அவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளை யில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News