உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

Published On 2022-12-14 10:16 GMT   |   Update On 2022-12-14 10:16 GMT
  • பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு மானோஜிபட்டி லட்சுமி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 42 ). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார் . திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News