உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவி உள்பட 2 பேரிடம் நகை பறிப்பு

Published On 2023-08-04 09:29 GMT   |   Update On 2023-08-04 09:29 GMT
  • பஸ்சில் யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.
  • ஸ்ரீஹரிணி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

ஈரோட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ஸ்ரீஹரிணி (வயது 19), இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2 ம் ஆண்டு படித்து வருகிறார், இவர் ராமநாதபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஸ்ரீஹரிணி பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு அறைக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது யாரோ மர்மநபர் ஸ்ரீஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் வைர செயினை பறித்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வைர செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தெற்கு உக்கடம்அருகே உள்ள புல்லுகாடு பகுதியை சேர்ந்த அங்கண்ணன். இவரது மனைவி சுகந்தி (39). சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும்பி.பி. வீதியில் நடந்து சென்றனர். அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.

இதுகுறித்து சுகந்தி பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவருடன் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News