உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Published On 2023-06-08 09:39 GMT   |   Update On 2023-06-08 09:39 GMT
  • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
  • பீரோ உடைக்கப்பட்டு, 23 பவுன் நகை 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

பட்டுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70 ).

இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் சம்பவதன்று 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து ஊரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றனர்.

பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 23 பவுன் நகை மற்றும் 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து ராமசாமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News