உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே கோவிலில் நகை திருட்டு

Published On 2023-02-09 09:19 GMT   |   Update On 2023-02-09 09:19 GMT
  • திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 11 கிராம் எடைகொண்ட 3 பொட்டு தாலிகள், கோவில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 ஜோடி கண்மலர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகி கந்தசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனர்.

Tags:    

Similar News