உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடந்தது.

ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

Published On 2023-10-29 09:35 GMT   |   Update On 2023-10-29 09:35 GMT
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் சி.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ரமேஷ் , சரவணன், கணே சன், செந்தில்குமார் , செல்வ ம் , ரவிச்சந்திரன், பாலசு ப்ரமணியன், சித்ரா, வளர்மாலா, ராணி , அந்துவன்சேரல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்ம ட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்,

உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 1.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரி த்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெ டுக்க ப்பட்டது. முடிவில் சத்து ணவு ஊழியர் சங்க மாவ ட்டச் செயலாளர் அருளே ந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News