உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு அழைப்பு
- சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேனி:
கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டு–க்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில், துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ண–ப்பித்து, பயனடையுமாறு தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.